×

பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

பாட்னா: பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் சம்பவ இடத்திலையே 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பீகார் மாநிலம் பாட்னா மாவட்டம் கன்கர்பக் பகுதியில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கட்டுமான பணிக்காக கிரேன் வாகனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கட்டுமான பணிகள் இன்று காலை வழக்கம்போல் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

அப்போது, பயணிகளை ஏற்றிக்கொண்டு சாலையில் வேகமாக வந்த ஆட்டோ நின்று கொண்டிருந்த கிரேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணித்த 3 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

The post பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Bihar ,Patna ,Kangarbagh ,Patna district of Bihar ,Dinakaran ,
× RELATED பீகார் மாநிலத்தில் நீட் தேர்வு...